தலையில்லாத முண்டம்
அநேகமாக நான் 3 அல்லது 4 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரமது. சாலைப்புதூரில் இருந்து பக்கத்து ஊரான காளாஞ்சிபட்டிக்கு தாத்தாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். (அதுதான் எனது சொந்த ஊரும்கூட). ஒரு மதிய வேளை. ஊரே ஒரே அல்லோலகல்லோகலமாக இருந்தது. எல்லோர் முகத்திலும் பீதி. ஊரின் நடுவில் இருந்த வேப்பமரத்தின் தழைகளை ஆளாளுக்கு பறித்துக்கொண்டிருந்தனர். சிலர் கிளைகளையே முறித்துக்கொண்டு ஓடினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று கேட்டேன். “உனக்குத் தெரியாதா? நம்ம ஊருக்குப் பேய் வரப்போகுதாம்” “பேயா?” ”பேய்கூட இல்ல...தலை இல்லாத முண்டம் வரப்போகுதாம். அதுக்காகத்தான் எல்லாரும் வேப்பந்தழைய ஒடிச்சு வீட்ல எரவாரத்துல (முகப்பில்) சொருகி வைக்கிறோம். உங்க வீட்டுக்கு நீ ஒடிச்சுட்டுப்போகலையா?” “இல்லையே!” “அப்படின்னா யார்கிட்டயாவது ரெண்டு தழ வாங்கிக்கிட்டுபோ...உங்க தாத்தா வீட்ல வைக்கணும்ல” “சரி சரி...தலை இல்லாத முண்டம் என்ன பண்ணுமாம்?” “அது வந்து கதவத் தட்டும். குடிக்கத் தண்ணி கேக்கும். நாம கதவ தெறக்க்ககூடாது. தெறந்தா நாம ஒடனே செத்துப்போயிருவோம்” எனக்கு பாதி உயிர் போய்விட்டது. ”அப்போ என்
Comments
First let me congratulate you for the work you are doing. I would say this is one of the best blogs i have seen. It's very informative and whenever i go through your blog it takes me to village side and giving a nice feeling.
Keep up the good work
மிகவும் அருமை....அதுவும் அந்த சுத்து மிட்டாய் என்னை மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே அழைத்துச் சென்றது.
உங்களது பதிவின் மூலம் காசு மிட்டாயும் (அஞ்சு அல்லது பத்து பைசா உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.) எனக்கு ஞாபகம் வந்தது.
அப்புறம் உங்கள் ஊரில் மஞ்சள்னெத்தி மரம் இருப்பதில்லையா...?அந்த மரத்தை எங்கள் ஊர் தவிர்த்து மற்ற இடங்களில் நான் பார்த்ததில்லை...பெரிய மரத்தில் சிறிய தேன் மிட்டாய் அளவில் காய்கள் பசை நிறத்தில் இருக்கும்..பழுத்தால் அடர்கறுப்பான நிறத்தில் மாறும்.... பல மதிய நேரங்களில் இவற்றை நான் உணவாக உண்டுள்ளேன்...
துவக்கப்பள்ளி குறித்து உங்கள் பதிவு:
எங்கள் பள்ளியில் ஒன்னாப்புக்கும் ரெண்டாப்புக்கும் ந்டுவில் பின்னப்பட்ட ஒரு தட்டி இருக்கும்..எனது நண்பன் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது பழைய வகுப்பு டீச்சரின் மேல் உள்ள அன்பில் தட்டியின் ஓரத்தின் வழியே
மறுபடியும் ஒன்னாம் வகுப்பில் போய் உக்கார்ந்த்து விடுவான்.
உங்கள் பதிவுகளுக்கு மிக்க மிக்க நன்றி.
-பொ.வெண்மணிச் செல்வன்
thank you so much for the valuable comments. They are 100% heartiest. I need your support forever.
thanking
durai