Posts

Showing posts from May, 2008

கோவைப்பழம்

Image
சாலைப்புதூர் பள்ளியில் எங்களுக்கு கிடைத்த தின்பண்டங்கள் குறித்துக் கடந்த பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா! இந்தப் பதிவில் முழுக்க முழுக்கப் பட்டிக்காடான காளாஞ்சிபட்டியில் எனக்கு வேறுவிதமான இயற்கைத் தின்பண்டங்கள் கிடைத்தன. அங்கு உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் கொஞ்சநாட்கள்தான் படித்தேன். 3ம் வகுப்பு மட்டும். அப்போது விதம் விதமான பொருட்கள் எங்களுக்கு தின்னக் கிடைத்தன. அதில் குறிப்பிட வேண்டியது புளியம்பிஞ்சு. பூ பூத்த புளியமரம் ஒரு விதமான மணத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். அந்தப் பூக்களையும் அப்படியே சாப்பிடலாம். லேசான புளிப்புச்சுவையும் துவர்ப்புச் சுவையும் அடங்கியது புளியம்பூ. சிலருக்குத்தான் அந்தச் சுவை பிடிக்கும். ஆனால் அனைவரையும் கவர்வது புளியம்பிஞ்சுதான். சுண்டுவிரலில் கால்பகுதிக்கும் குறைவான மெலிய பிஞ்சுகள் லேசாக உடைத்தாலே உடைந்துவிடும். அவை அட்டகாசமான சுவையுடன் இருக்கும். நறுக் நறுக்கென்று சாப்பிடுவதும் நல்ல அனுபவம்தான். அவற்றைச் சிறிது உப்பு, மிளகாய்ப்பொடியுடன் தொட்டுக்கொண்டு தின்போம். சட்னியின் சுவையோடு இருக்கும். விழுது விழுதாக சட்னி செய்து சாப்பிடுபவர்களும் உண்டு. அவ

சுத்தற முட்டாய், ,பால் ஐஸ்......

Image
கிராமங்களில் உள்ள சிறுவர்களுக்கு பாக்கெட் மணி எனப்படும் கைச்செலவுப் பணம் கிடைப்பது நிரம்பவும் (ரொம்பவே) அரிது. ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலை இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! நான் சாலைப்புதூர் மற்றும் காளாஞ்சிபட்டி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிகளில் படித்தேன் என்று கூறியிருந்தேன் அல்லவா? இந்த இரண்டு ஊர்களுமே 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பவைதான். ஆனர்ல் இரண்டுக்கும் தலைகீழ் வித்தியாசங்கள் உண்டு. சாலைப்புதூர் திண்டுக்கல்&பழநி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இதனால் நாகரீகத்தின் சில துளிகள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடக்கும். அங்கு நான் 3ம் வகுப்புவரை படித்தேன். வகுப்பு என்று அழுத்தம் திருத்தமாக நாங்கள் சொன்னதில்லை. 'ஒண்ணாப்பு, ரெண்டாப்பு, மூணாப்பு, நாலாப்பு, அஞ்சாப்பு'&தான். லும். நூநான் பால்வாடியிலிருந்து (பாலர் பள்ளி அல்லது பாலகர் பள்ளி என்பதுதான் தமிழில் சரியான சொற்கள்.) ஒண்ணாப்பு போவதற்கு கஷ்டமே படவில்லை. காரணம், இரண்டும் ஒரே கட்டிடத்தில் இருந்ததுதான். மட்டுமல்லாமல் இரண்டு வகுப்புகளுக்கும் இடையே தடுப்புச் சுவர் எதுவும

காக்கா கடி

Image
கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்த அனைவருக்கும் காக்கா கடி என்ற சொல் மிகவும் பரிச்சயமானதாகவே இருக்கும். காக்கா கடி என்பது காகம் வந்து கடிப்பதல்ல. காகத்தைப் போலப் பட்டும் படாமலும் கடிப்பதாகும். பள்ளிச்சிறுவர்களில் யாரேனும் ஒருவரிடம் ஒரு உணவுப்பொருள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த மாணவன் அல்லது மாணவியின் நண்பனோ தோழியோ அருகில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது கொடுக்காமல் உண்ண மனசு வராது. முழுவதுமாகக் கொடுக்கவும் மனசு வராது. எனவேதான் இந்த காக்கா கடி என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள். பொதுவாக மிட்டாய், கடலைமிட்டாய், நெல்லிக்காய், கடுக்கு மிட்டாய் (எள் மிட்டாய் அது. கடிக்கும்போது கடுக் என்று சத்தம் வருவதால் அது 'கடுக்'கு மிட்டாய் ஆனது. கடிப்பதற்கும் கடினமாகத்தான் இருக்கும்.) போன்றவைதான் காக்கா கடிக்கு ஆளாகும். தனது உணவுப் பண்டத்தைப் பகிர்ந்து தர விரும்பும் உடைமைதாரர், அதனை தனது சட்டை அல்லது பாவாடையின் ஒரு முனையில் வைத்து அப்பண்டத்தை துணியால் சுற்றி மூடிவிடுவார். அதன்பிறகு லாவகமாக அந்த துணியுடன் இணைந்த உணவுப்பண்டத்தை மெலிதாகக் கடித்து விடுவார்.

ஊ.ஒ.து.பள்ளி

Image
கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு என்று சில தனித்துவமான அனுபவங்கள் உண்டு. நானும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள காளாஞ்சிபட்டி என்ற கிராமத்திலும் சாலைப்புதூர் என்ற கிராமத்திலும் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்திருக்கிறேன். சென்னையில் தற்போது படித்துவரும் குழந்தைகளைக் கேட்டால் 'நான் பத்மா சேஷாத்ரியில் படிக்கிறேன்' என்றோ, 'டிஏவி&பள்ளியில் படிக்கிறேன்' என்றோ அல்லது கார்ப்பொரேஷன் பள்ளியில் படிக்கிறேன் என்றோ பதில் கூறுவார்கள். ஆனால் மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களைக் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? "நான் ஊ.ஓ.து.பள்ளியில் படிக்கிறேன்" என்றோ ''ஊ.ஒ.தொ. பள்ளியில் படிக்கிறேன் " என்றோ கூறுவார்கள். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி என்பது அதன் விளக்கம். இப்பள்ளிக்கூடங்களில் உள்ள மதிய உணவுத்திட்டத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கவனிக்கிறது. இதற்காக சத்துணவு அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். அவருக்குக் கீழே சமையல் பணியாளர் இருப்பார். இதுதவிர பள்ளிக் கட்டிடம் கட்டுத