சென்னை எனும் பெருந்தெய்வம்
நண்பர்களே, இது நிச்சயமாக ஒரு அரதப் பழசான ஒரு புகைப்படம் என்பது பார்த்த மாத்திரத்தில் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் இது எந்த கிராமத்தில் எடுத்த புகைப்படம் என்று தெரியுமா? சென்னையேதான். ஒரு நாள் நண்பர் ஒருவரின் கணிப்பொறியில் தட்டுப்பட்ட இப்புகைப்படத்தை வாங்கி பத்திரமாக சேமித்து வைத்துக்கொண்டேன். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.......... இந்த சென்னைப் பட்டணம் கிராமமாக இருந்தபோது அதன் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்னென்ன மாதிரியான தொழில்கள் புழங்கியிருக்கும்?.......அன்றைய மக்கள் எவ்விதம் உடுத்தியிருந்திருப்பார்கள்? அவர்களின் பேச்சு வழக்கு மொழி எப்படி இருந்திருக்கும்? கணிக்கவே கடினமாக இருக்கிறதல்லவா? கடினம்தான். காரணம் இருக்கிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வாழ்க்கை தரும் நம்பிக்கைக் கீற்றாக சென்னைப் பட்டணம் (சென்னப் பட்டணம் என்பதே சரி.) அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறது. கெட்டும் பட்டணம் போய்ச் சேர் என்ற பழமொழிகூட அதனை ஒட்டி வந்ததுதான். இப்படி பொருளாதார வாழ்க்கையில் கெட்டுப்போனவர்கள் இறுதிப்புகலிடமான இப்பட்டணத்திற்கு வந்து குவியக் குவிய சென்னப்பட்டணம் மதராஸ் என்ற கம்பீ