புகுமுன்............................
தமிழர்களின் அடையாளம் என்பதே கிராமங்கள்தாம், திரைகடல் ஓடியும் திரவியம் தேடிப் போனவர்களும் தங்கள் கிராமம் குறித்து தொலைக்காட்சியில் ஏதேனும் காட்சி இடடம்பெறும்போதோ அல்லது செய்தியைப் படிக்கும்போதோ இதயத்தின் அடிப்பகுதியை இனம்புரியாத கரங்கள் மென்மையாக வருடுவதை உணர முடியும், இந்த உணர்வுகளால் இணைக்கப்பட்ட ஒரு வலைதான் இன்றளவும் கிராமங்களின் புனிதத்தன்மையையும் யதார்த்தத்தையும் இந்த நவீன யுகத்திலும் உயிர்ப்பித்து வைத்திருக்கிறது,
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலே சொன்ன கருத்து பொருந்தும் என்றhல் இந்தியாவின் வௌ;வேறு நகரங்களில் பிழைப்பு தேடிச்சென்று ஆங்காங்கே வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு வேறெhரு விதமான வேதனை. நம் கண்ணெதிரே நமது கிராமங்கள் முன்னேறி வருவதை வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடிகிற வேதனை அவர்களுக்கு. கிராமத்தின் எளிமை. அன்பு. கரிசனம். உறவுகளோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு கிராமத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்தே வளர முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் ஒருபுறம்,
அதேபோல நமது சொந்த கிராமங்களுக்குச் செல்லும்போது தற்போது நகர்ப்புறங்களில் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன வசதிகள். அத்தியாவசியமாகிவிட்ட ஆடம்பரங்கள். நியாயமான அடிப்படை வசதிகள். முன்னேற்றத்திற்குப் பயன்படும் முற்போக்கான மனப்பாங்கு ஆகியவற்றை கிராமங்களில் தேடி ஏமாற்றமடைய வேண்டியதாக உள்ளது, இரண்டுங்கெட்டானாக திரும்பவும் நகரங்களின் கான்கிரீட் காடுகளை நோக்கி கனத்த இதயத்தோடு பேருந்திலோ. விமானத்திலோ. ரயிலிலோ ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, இதுதான் இன்னொரு வேதனை,
இது இப்படி இருந்தாலும் நகர்ப்புறங்களில் எதிர்காலத்தில் ;பிறக்க இருக்கும் குழந்தைகளுக்கும் தற்போது வளர்ந்து ஆளாகியிருக்கும் இன்றைய இளையதலைமுறைக்கும் நமது வேர்களைக் குறித்த விபரங்கள் தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது, இந்த வரலாற்றுத்தவறைத்தொடர நாம் அனுமதித்து விடக்கூடாது. எனவேதான் நமது கிராமங்களின் வாழ்க்கை. சடங்குகள். நம்பிக்கைகள். மு்டநம்பிக்கைகள். பழக்கவழக்கங்கள். பழமொழிகள். திருமண முறைகள். தொழில் உட்பட பல்வேறு அம்சங்களையும் எனக்குத் தெரிந்தவரை. தெரிந்தவகையில் முடிந்தவரை இந்த வலைப்பூவில் இடம்பெறச் செய்ய உள்ளேன், தமிழ்கூறு நல்லுலகு இந்த முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன், இதில் இடம்பெறும் படைப்புகள் குறித்து உங்களின் கருத்துக்கள். செய்திகளை அறியத்தாருங்கள்,
என்றென்றும அன்புடன்;.
கா.சு.துரையரசு
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலே சொன்ன கருத்து பொருந்தும் என்றhல் இந்தியாவின் வௌ;வேறு நகரங்களில் பிழைப்பு தேடிச்சென்று ஆங்காங்கே வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு வேறெhரு விதமான வேதனை. நம் கண்ணெதிரே நமது கிராமங்கள் முன்னேறி வருவதை வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடிகிற வேதனை அவர்களுக்கு. கிராமத்தின் எளிமை. அன்பு. கரிசனம். உறவுகளோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு கிராமத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்தே வளர முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் ஒருபுறம்,
அதேபோல நமது சொந்த கிராமங்களுக்குச் செல்லும்போது தற்போது நகர்ப்புறங்களில் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன வசதிகள். அத்தியாவசியமாகிவிட்ட ஆடம்பரங்கள். நியாயமான அடிப்படை வசதிகள். முன்னேற்றத்திற்குப் பயன்படும் முற்போக்கான மனப்பாங்கு ஆகியவற்றை கிராமங்களில் தேடி ஏமாற்றமடைய வேண்டியதாக உள்ளது, இரண்டுங்கெட்டானாக திரும்பவும் நகரங்களின் கான்கிரீட் காடுகளை நோக்கி கனத்த இதயத்தோடு பேருந்திலோ. விமானத்திலோ. ரயிலிலோ ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, இதுதான் இன்னொரு வேதனை,
இது இப்படி இருந்தாலும் நகர்ப்புறங்களில் எதிர்காலத்தில் ;பிறக்க இருக்கும் குழந்தைகளுக்கும் தற்போது வளர்ந்து ஆளாகியிருக்கும் இன்றைய இளையதலைமுறைக்கும் நமது வேர்களைக் குறித்த விபரங்கள் தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது, இந்த வரலாற்றுத்தவறைத்தொடர நாம் அனுமதித்து விடக்கூடாது. எனவேதான் நமது கிராமங்களின் வாழ்க்கை. சடங்குகள். நம்பிக்கைகள். மு்டநம்பிக்கைகள். பழக்கவழக்கங்கள். பழமொழிகள். திருமண முறைகள். தொழில் உட்பட பல்வேறு அம்சங்களையும் எனக்குத் தெரிந்தவரை. தெரிந்தவகையில் முடிந்தவரை இந்த வலைப்பூவில் இடம்பெறச் செய்ய உள்ளேன், தமிழ்கூறு நல்லுலகு இந்த முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன், இதில் இடம்பெறும் படைப்புகள் குறித்து உங்களின் கருத்துக்கள். செய்திகளை அறியத்தாருங்கள்,
என்றென்றும அன்புடன்;.
கா.சு.துரையரசு
Comments
-sanjaya raghunathan