கிராமங்களில் , குறிப்பாக சற்றே வறண்ட பகுதிகளில் வா அவரை காய்ச்சி என்ற பெயரிலான மரங்கள் இருக்கும். அவற்றுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பெயர் என்பதால் அடுத்த பதிவில் அம்மரத்தின் புகைப்படத்தை போட்டுவிடலாம் என்று இருக்கிறேன்.
(iframe https://www.amazon.in/gp/product/B07BNZKT7S/ref=as_li_tl?ie=UTF8&tag=pattikkadu-21&camp=3638&creative=24630&linkCode=as2&creativeASIN=B07BNZKT7S&linkId=29ca4d1f999d595edde35a6ab29d3bd4 iframe/) சரி
கதைக்கு வருவோம். இந்த வா அவரை காய்ச்சி மரத்தின் பூ இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மென்று பார்த்தால் கொஞ்சம் புளிப்பாக இருக்கும். நாங்கள் அதை சாப்பிடுவோம். முக்கியமான உணவு அது இல்லை. அம்மரத்தின் இலைகளை உருவி (பிடுங்குவது என்று சொல்ல கூடாது. அடுக்கடுக்காக இலை இருந்தால் அதனை உருவுவது என்றுதான் சொல்ல வேண்டும்.) அதனுடன் கொஞ்சம் காய்ந்த மிளகாய், கொஞ்சம் வெள்ளம், கொஞ்சம் கல் உப்பு எல்லாவற்றையும் போட்டு அரைக்க வேண்டும். அம்மிதான் உத்தமம். மசியலக அரைத்த பிறகு சாபிட்டால் அற்புதமாக இருக்கும். இதனுடன் தக்காளி ரசம் துணை சேர்ந்தால் அட்டகாசமாக இருக்கும். செலவில்லாத உணவுப் பண்டமாக இது எங்கள் இளமை பருவத்தில் இருந்தது. இன்றைய குழந்தைகளுக்கு அந்த மரத்தின் பெயர் கூட தெரியாது என்பதுதான் சோகம்.

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு